search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய மருத்துவ சங்கம்"

    • பதஞ்சலி நிறுவனத்தின் விளம்பரங்கள் குறித்து இந்திய மருத்துவ சங்கம் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது.
    • தவறான விளம்பரங்களை வெளியிட்டதற்காக பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்தது.

    புதுடெல்லி:

    ஆயுர்வேத பல்பொடி, சோப்பு, எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பதஞ்சலி நிறுவனம் தயாரித்து விற்பனை செய்கிறது. நவீன மருந்துகளுக்கு எதிராக பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் விளம்பரம் செய்து வந்தது.

    இதற்கிடையே, பதஞ்சலி நிறுவனத்தின் தவறான விளம்பரங்கள் குறித்து இந்திய மருத்துவ சங்கம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. அந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது அலோபதி மருந்துகளை குறிவைத்து தவறான விளம்பரங்களை வெளியிட்டதற்காக பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்தது.

    தவறான விளம்பரங்கள் நீடித்தால் ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தது.

    இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறி பதஞ்சலி நிறுவனம் அலோபதி மருந்துகளுக்கு எதிராக விளம்பரங்களை வெளியிடுவதாக இந்திய மருத்துவ சங்கம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

    இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் பதஞ்சலி நிறுவனத்துக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்ததுடன், பதஞ்சலி நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான உத்தரவுகளை பிறப்பிக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    • ஷஹானா திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் முதுகலை இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
    • தற்கொலைக்கு தூண்டுதல், வரதட்சணை தடை சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு ரூவைசை போலீசார் கைது செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள வெஞ்ஞாரமூடு பகுதியை சேர்ந்தவர் அப்துல் அசீஸ் என்பவரின் மகள் ஷஹானா (வயது26). எம்.பி.பி.எஸ். படித்துள்ள இவர், திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் முதுகலை இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், தான் தங்கியிருந்த குடியிருப்பில் கடந்த 4-ந்தேதி மயக்க ஊசி போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    அவருடைய தற்கொலைக்கு அவரது நண்பரான டாக்டர் ரூவைஸ் தான் காரணம் என்பது தெரியவந்தது. இருவருக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்ட நிலையில், அவர்கள் கேட்ட அதிக வரதட்சணையை தர முன்வராத காரணத்தால் திருமணம் செய்துகொள்ள ரூவைஸ் மறுத்திருக்கிறார். இதில் வேதனையடைந்த மாணவி ஷஹானா தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து தற்கொலைக்கு தூண்டுதல், வரதட்சணை தடை சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு ரூவைசை போலீசார் கைது செய்தனர். பின்பு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்நிலையில் முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்து ரூவைசை இந்திய மருத்துவ சங்கம் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளது.

    • 100 கிராமங்களை தத்தெடுப்பது இந்திய மருத்துவ சங்கத்தின் கனவு திட்டமாகும்.
    • விரைவில் மீதி 50 கிராமங்கள் தத்தெடுக்கப்பட உள்ளது.

    திருப்பூர் :

    இந்திய மருத்துவ சங்க(ஐ.எம்.ஏ.) அவினாசி டெக்ஸ்சிட்டி கிளை தொடக்க விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு, இந்திய மருத்துவ சங்க சி.ஜி.பி. பிரிவு மற்றும் ஏ.எம்.எஸ். பிரிவு தொடக்க விழா, டாக்டர்கள் தின கொண்டாட்டம் ஆகிய ஐம்பெரும் விழா திருப்பூர் காங்கயம் ரோட்டில் உள்ள காயத்ரி ஓட்டலில் நடந்தது. ஐ.எம்.ஏ., டி.என்.எஸ்.பி. தலைவர் டாக்டர் டி.செந்தமிழ் பாரி தலைமை தாங்கினார். ஐ.எம்.ஏ.அவினாசி டெக்ஸ்சிட்டி கிளை தலைவர் டாக்டர் மோகன சுந்தரி வரவேற்புரையாற்றி தனது பொறுப்பை புதிய தலைவர் டாக்டர் அஜாஸ் பி.அன்சாரியிடம் ஒப்படைத்தார்.

    டாக்டர் அஜாஸ் பி.அன்சாரி அவினாசி டெக்ஸ்சிட்டி கிளை செயலாளர் டாக்டர் டி.கார்த்திகேயன், பொருளாளர் டாக்டர் கே.சுந்தரமூர்த்தி, துணை தலைவர் டாக்டர் பி.ஹரிவீர விஜயகாந்த், இணை செயலாளர் டாக்டர் பி.நல்லசிவம், மத்திய கவுன்சில் உறுப்பினர் டாக்டர் முமகது முபாரக் அலி, மாநில கவுன்சில் உறுப்பினர் டாக்டர் கே.பொம்முசாமி, ஆலோசனை குழு உறுப்பினர்கள் டாக்டர் ஆர்.ஜெயராமகிருஷ்ணன், டாக்டர் யு.ரமணி, டாக்டர் என்.ராஜ்குமார், டாக்டர் எஸ்.சரவணன், டாக்டர் ஆர்.பிரகாஷ் ஆகியோரை அறிமுகம் செய்துவைத்தார்.

    திருப்பூர் தெற்கு தொகுதி செல்வராஜ் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் ஆகியோர் காணொலி காட்சி வாயிலாக புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து அவினாசி டெக்ஸ்சிட்டி கிளை சார்பில் அனைத்து மருத்துவ சேவை வழங்குவதற்காக திருப்பூரில் உள்ள கணியாம்பூண்டி கிராமத்தை தத்தெடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் சிறந்த டாக்டர்களுக்கு விருது வழங்கப்பட்டது. இதேபோல் 21 டாக்டர்களுக்கு 'பில்லர்ஸ் ஆப் டெக்ஸ்சிட்டி' என்ற விருதுகள் வழங்கப்பட்டது. இந்த விருதுகளை ஐ.எம்.ஏ., டி.என்.எஸ்.பி. தலைவர் டாக்டர் டி.செந்தமிழ் பாரி வழங்கி பேசியதாவது, பொதுமக்களுக்கு மருத்துவ சேவை வழங்குவதற்காக 100 கிராமங்களை தத்தெடுப்பது இந்திய மருத்துவ சங்கத்தின் கனவு திட்டமாகும். இதற்காக இதுவரை 50 கிராமங்கள் தத்தெடுக்கப்பட்டுள்ளன. விரைவில் மீதி 50 கிராமங்கள் தத்தெடுக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஐ.எம்.ஏ., டி.என்.எஸ்.பி. செயலாளர் டாக்டர் என்.ஆர்.டி.ஆர்.தியாகரஜன், தேசிய ஐ.எம்.ஏ. முன்னாள் தலைவர் டாக்டர் ஜே.ஏ.ஜெயலால், துணை தலைவர் டாக்டர் ஆர்.குணசேகரன், ஐ.எம்.ஏ., டி.என்.எஸ்.பி. தேர்வு தலைவர் டாக்டர் அபுல் ஹசன், மேற்கு மண்டல துணை தலைவர் டாக்டர் கருணா, முன்னாள் துணை தலைவர் டாக்டர் சி.என்.ராஜா, டி.எம்.எப். டாக்டர் தங்கவேல், ஸ்ரீ குமரன் மருத்துவமனை டாக்டர் செந்தில் குமரன், ஐ.எம்.ஏ., டி.என்.எஸ்.பி. டாக்டர் ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக கலை நிகழ்ச்சிகள் நடந்தது. அவினாசி டெக்ஸ்சிட்டி கிளை செயலாளர் டாக்டர் டி.கார்த்திகேயன் நன்றியுரையாற்றினார்.

    ×